இப்போது அதிகமாக பேசும் பொருளாக மாறி இருக்கக்கூடிய விஷயம்
என்னவென்றால் இம் முறை சரிகமப ரியாலிட்டி
நிகழ்ச்சியில இலங்கையை சேர்ந்த மூன்று
போட்டியாளர்கள் பங்கு பெற்றுவது தான்.
குறிப்பாக இப்போது இந்த போட்டியில பங்கு
பெற்றக்கூடிய போட்டியாளர்களாக செலக்ட்
செய்து இருக்கக்கூடிய போட்டியாளர்களாக
அம்பாறை , திருக்கோவில் விநாயகபுரத்தை
சேர்ந்த சபேசன் மற்றும் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக
கொண்ட தரங்கினி அதேபோல் சுவீஸ் நாட்டில் இருந்து வந்துள்ள பிரஷான் ஆகியோரே தெரிவாகியுள்ளனர் .



இங்கு நாம் பார்த்த மிக முக்கிய விடயமா என்னவென்றால் இலங்கை போட்டியாளர்கள் என்றவுடன் அனுதாப ரீதியான பார்வையே பார்க்கப்படுகிறது.
இலங்கை போட்டியாளர்களை வைத்து வியாபாரம் நடக்கிறதா? என்ற
ஒரு மாதிரியான கேள்வி எழுப்பப்படுகிறது.
குறிப்பாக சொல்லப்போனால் கடந்த வருடம் பேசு பொருளாக
அமைந்த விடயம் என்ன அப்படின்னா அசானி மற்றும் கில்மிசா போட்டியிட்டது தான் .
கில்மிசா இறுதி போட்டி வரைக்கும் வந்து அந்த பிரம்மாண்ட மாட
மேடையில டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டிருந்தார்
இருந்தாலும் கூட ஈழம் என்று சொல்லும்போது
போரையும் அதே மாதிரி மலையகம் என்று சொல்லும்போது
வறுமையையும் அந்த மேடையில ஏன் காண்பிக்க வேண்டும் என்ற
கேள்விகள் இருக்கிறது.
குறிப்பாக கூறினால் இம்முறை வந்துள்ள போட்டியாளரான அம்பாறை சபேசன் அவர்களுடைய விஷயங்கள் உணர்வு
பூர்வமாக பேசப்பட்டிருக்கக்கூடியவை.
29 வருஷமா தனக்கு வெற்றியே கிடைக்கவில்லை . இதுதான் முதலாவது வெற்றி என்ற மாதிரி உணர்வு பூர்வமாக கூறினார் .
அழுகக்கூடிய மேடையா இது. போட்டிக்கு தான்
போயிருக்கோம். ஏன் நாம் எங்களுடைய உணர்வுகளை வந்து ரொம்ப எமோஷனலா ரொம்ப வறுமையா அதே மாதிரி உணர்வுகளை ஏன்
வியாபாரம் ஆக்கவேண்டும்.
எல்லா இசை போட்டிகளிலும் இலங்கைபாட்டியாலா என்றவுடன் ஒரு இடம்
குறிப்பாக இருக்கும்.
ஆனாலும், அந்த இடம் வறுமைக்காகவும், போருக்காகவும் மட்டும்
இருக்குமாக இருந்தால், அது சித்தரிக்கப்படுகின்ற விடயம் வந்து
தவறானதாக இருக்கிறது.
எங்களுடைய கலைஞர்களுக்கும் வந்து திறமை இருக்கிறது
என்பது மிக பெரிய உண்மை .
அந்த திறமையை வைத்து கொண்டு தான் இவர்கள்
இந்தியாவை நோக்கி அவர்களுடைய படைப்பினை
அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வருகிறார்களே
தவிர , எங்கள் போட்டியாளர்களை பயன்படுத்தி இந்திய
தொலைக்காட்சிகள் வருமானம் ஈட்ட முயற்சித்தால்
அது தவறான ஒரு விடயம்