அதிரனுடன் அதிரடி பயணத்தில் தினேஷ்பிரமிக்க வைக்கும் படப் பூஜை சபாஷ்

இலங்கையின் முன்னணி இயக்குனர் தினேஷ் கனகராஜின் இயக்கத்தில் ஏட்ரியன் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகவுள்ள இலங்கையின் புதிய முழுநீள திரைப்படமான “அதிரன்” திரைப்படத்தின் பூஜை நிகழ்வும் ஊடகவியலாளர் சந்திப்பும் கொழும்பு 4 அருள்மிகு ஶ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் தீப்திகா ஞானசேகரன் மற்றும் திரைப்படத்தின் கதாநாயகனான முன்னணி நடிகர் சுதர்சனுடன் கதாநாயகியான சிங்கள சினிமாவின் முன்னணி கதாநாயகியான மிச்சலா தில்ஹாரா ஆகியோரும்,  திரைப்படத்தில் பணியாற்றவுள்ள  கலைஞர்களும் தொழில்நுட்பவியலார்களும் கலந்து கொண்டிருந்தனர்.

திரைப்படத்தின் ஆரம்ப பூஜைகளை மாணிக்க விநாயகர் ஆலய பிரதான சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இயக்குனர் தினேஷ் கனகராஜ் கருத்து தெரிவிக்கையில்:- இத்திரைப்படமானது இலங்கையின் கிராமத்து சூழ்நிலையை பிரதிபலிக்கும் கதைக்களமாக அமைய இருப்பதாகவும் இத்திரைப்படமானது இலங்கையின் மிகப் பிரம்மாண்டமான ஒரு திரைப்படமாக வர இருப்பதாகவும் மேலும் இத்திரைப்படம் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் திரையிடப்பட உள்ளதாகவும், அத்துடன் இத்திரைப்படமானது நேர்த்தியான, அனைத்து ரசிகர்களையும் கவரும் வண்ணம் முன்வைக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து எமது நாட்டின் திரைப்படத் துறையை முன்னேற்றுவதற்காக ஏட்ரியன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் எடுத்துள்ள இந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது என்று,  இலங்கையின் முன்னணி நடிகரும் இந்திய திரைத்துறையில் தடம் பதித்தவருமான கதாநாயகன் சுதர்சன் அவர்கள் கருத்துத் தெரிவித்தார்.

மேலும், இத்திரைப்படத்தில் இலங்கையின் பல புகழ்பூத்த முன்னணி கலைஞர்களும், முன்னணி தொழில்நுட்பவியலாளர்களும் சேவையாற்றுதல் குறிப்பிடத்தக்கதாகும்.

படக்குழுவினருக்கு இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!