சக்தி டிவிகளுக்கு முன்னாடி காலா வெற்றிகளுக்கு பின்னாடி நம்ம பாலா

1998 ஆம் ஆண்டு October 20 ஆம் திகதியன்று
தமிழ் மக்களின் பெரும் கவலைகளுக்கு முற்று புள்ளி
வைக்கப்பட்ட நாள்.

சக்தி TV ஆரம்பிக்கப்பட்ட நாள் தான் தமிழ் மக்களின் பெரும் கவலைகள் மறந்து சிரிப்பு மற்றும் சிந்தனையை தந்த நாள்.

யுத்தம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் மக்கள் யுத்தத் செய்திகளை மட்டும் பார்த்து, கேட்டு கொண்டிருந்த காலப் பகுதியில் அவர்களுக்கு தமிழ் கலந்த அன்பு முத்தத்தை சக்தி வழங்கியது.

சக்தியின் ஆரம்ப காலம் முதல் இன்று வரை பல அதிகாரிகள் மாறி, மாறி வந்தாலும் ஒரு சிலரே இன்னமும் தொடர்கின்றனர்.

அந்த வகையில் தமிழகம் நமக்கு தந்த ஒரு சிறந்த படைப்பாளி தான் நம்ம DFT பாலா.


பல நிகழ்ச்சிகள் தரமான படைப்பாக வருவதற்கு மிக முக்கிய காரணம் ஒளிப்பதிவாளரே .

அந்த வகையில் சக்தி டிவியின் பல நிகழ்ச்சிகளை சிறப்பாக ஒளிப்பதிவு செய்து அவற்றை மக்கள் பேசும் நிகழ்ச்சியாக மாற்றியவர் நம்ம S பாலா DFT .

சினிமா கல்லூரியில் டிப்ளமோ பட்டம் பெற்ற பாலா தமிழகத்தில் பிறந்தவர்

அவரது திறமைகள் அனைத்தும் சக்தி டிவிக்கு அர்ப்பணித்து இன்றும் அவர் சக்தியோடு தொடர்கிறார் .

தொடர்ந்தும் பல வெற்றி படைப்புக்களை தர இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களின் உரிமைகளுக்காக இன்றும் , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!