இன்னுமாடா நாங்க மாறலை..! நாங்க தான் மாற்றனும்

இன்னுமாடா நாங்க மாறலை..!
நாங்க தான் மாற்றனும்

புதிய படைப்புகள் இலங்கை தமிழ் தொலைக்காட்சிகளில் வெளிவருவது நல்ல விடயம் .

உள்நாட்டு கலைஞ்சர்களை உள்வாங்கி நமது படைப்புகள் வெளிவருவது மகிழ்ச்சியே.

சக்தியின் நிகரற்ற படைப்பாளி தினேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கடலாய் காதல் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது .

நல்ல விடயம் தானே …இதட்கு ஏன் என்ன பிரச்சனை என்று கேட்பது புரிகிறது.

இந்த கதையின் முன்னோட்டத்தை நாம் பார்த்தோம் . அருமை . நல்ல கற்பனை .இக்கால தலைமுறைக்கேற்ற காட்சி பதிவு .

பிறகென்ன … என்று கேட்டகிறீர்களா?…..அங்கு தான் சில மாற்றத்தை கொண்டு வர வேண்டும் .

உங்கள் கதை இக்கால தலை முறைக்கு ஏற்றதாக இருந்தாலும் இக்கால யதார்த்த சூழலும் தேவை ‘

இன்று சிங்கள தொலைக்காட்சி திரைக்கதைகள் அத்தனையும் யதார்த்தத்தை சொல்லி கொண்டு இருக்கும் போது நாம் கற்பனை உலகில் வாழ்கிறோம் .

இன்னும் கொஞ்சம் யதார்த்த சூழ்நிலையை கதைக்குள் கொண்டு வாருங்கள் .

உங்கள் படைப்புகள் கொஞ்சம் நமது இயல்பு வாழ்க்கையோடு தொடர்பு உள்ளதாக இருக்கட்டுமே .

ஏன் என்றால் உங்கள் தொலைக்காட்சியை இலங்கை முழுவதும் பார்கிறார்கள் . ஏழை பணக்காரன் வடக்கு கிழக்கு மலையகம் தெற்கு என நாடு முழுவதும்

எனவே தங்கள் வாழக்கையோடு ஒட்டி போகும் தொடர் கதைகளை தொடர்ந்து பார்ப்பார்கள் . அவர்கள் வாழ்க்கைக்கு எட்டாத கதைகளை பார்க்க காட்டும் ஆர்வம் குறைவு .

நல்ல படைப்புக்களை தரும் நீங்கள் இந்த விமர்சனத்தை வாசிப்பீர்கள் என எதிர்பார்ப்பது ‘.ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!