நாளை முதல் பரோட்டாக்கு ஆப்பு | கொழும்பில் மட்டுமா?…..முழு இலங்கையிலுமா?

உள்நாட்டு திரவ பெற்றோலியம் (LP) எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாளை (சனிக்கிழமை) முதல் 80 சதவீதத்திற்கும் அதிகமான சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் ஹோட்டல்கள் மூடப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் (AICOA) தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

மரக்கறி விலை அதிகரிப்புக்கு மேலதிகமாக சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு பிரதான பிரச்சினையாக மாறியுள்ளதாக அவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தங்கள் சேவைகளை தொடர முடியாத நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு காரணமாக மரக்கறி மதிய உணவு பொட்டலங்களின் விலை 180 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!