வெறிச்சோடியது யாழ்

கொரோனா பரவல் காரணமாக யாழ் நகரின் மத்திய பகுதி முடக்கப்படுள்ளது . யாழ்ப்பாணத்தில் கொரோனா பரவல் காரணமாக நேற்று மாலை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தலைமையில் இடம்பெற்ற அவசர கலந்துரையாடலில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந் நிலையில் யாழ் மத்திய பேருந்து நிலையமும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் பிரதான பஸ் நிலையத்தில் இருந்து மாற்றப்பட்டு முற்றவெளி மைதானத்தில் இருந்து சேவையில் ஈடுபடுகின்றனர். 10 நாட்களுக்கு இங்கிருந்து சேவைகள் இடம்பெறவுள்ளன.

யாழ் நகரின் மத்திய பகுதி இன்றைய தினம் வெறிச்சோடி இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!