இன்னும் எத்தனை காலத்திற்கு இந்திய தொடர்களை பார்ப்பது?

இன்னும் எத்தனை காலத்திற்கு தான் இந்திய தொலைக்காட்சி நாடகங்களை நாம் நம்பி இருப்பது.இதற்கு ஒரு முடிவு வேண்டாமா என்று நினைக்கும் போது தான் இலங்கை தமிழ் தொலைக்காட்சித்துறையில் தேசிய விருதுகள் பலவற்றை பெற்ற பிரபல ஊடகவியலாளர் சியாவுல் ஹஸன் இயக்கத்தில் ட்ரிப் டு ஹெல் தொடரின் தயாரிப்பு பனி ஆரம்பமாகியது.

ட்ரை மாஸ் மீடியா நிறுவனத்தின் கேப்பிடல் விசுவல் தயாரிப்பில் இந் நாடகம் தயாராகி வருகிறது.

இந்தத் தொலைக்காட்சி தொடரினை கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியுள்ளார்; இலங்கை தமிழ் தொலைக்காட்சித்துறையில் தேசிய விருதுகள் பலவற்றை பெற்ற பிரபல ஊடகவியலாளர் சியாவுல் ஹஸன்.

இவர் இலங்கை தொலைக்காட்சியில் பல வெற்றிப்படைப்புக்களை தந்தவர்.
2008 ஆம் ஆண்டு நான் பாடலாசிரியராக அறிமுகமாகிய இசை இளவரசர்கள் நிகழ்ச்சி மற்றும் இலங்கை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய தேசிய,சர்வதேச தமிழ் ரியாலிட்டி பாடல் போட்டி நிகழ்ச்சிகளை இயக்கிய பெருமைக்குரியவர்.

இயக்குனர் சியாவுல் ஹஸன் இயக்கத்தில் வெளிவரவுள்ள தொலைக்காட்சி தொடரில் ஜே ஒஸ்மன் இசையில் பாடல்களும் இடம் பெற்றுள்ளன .

எமது நாட்டின் பல புது முகங்கள் இந் தொடரில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

கெளரி நித்தியானந்தன் வசனம் எழுத கதிரேசன் கார்த்திக் திரைக்கதையை வடிவமைத்துள்ளார் .

இந்த தொடரின் பூஜை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி கேப்பிடல் வானொலி தலைமையகத்தில் இடம் பெறவுள்ளது.

புதிய சரித்திரம் படைக்க துடிக்கும் ட்ரிப் டு ஹெல் தொடரின் தயாரிப்பு குழுவுக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!