78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டில் பல பகுதிகளில் சிறப்பு நிகழ்வுகள் நடந்துள்ளது .

அந்த வகையில் சூரியன் அதிரடி நற்பணி மன்றத்தால் ஒரு சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திம்புள்ள தமிழ் மகா வித்தியாலயத்தில் சூரியன் அதிரடி நற்பணி மன்றம் அபிவிருத்தி குழு இணைந்து சிறப்பான ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது

மரம் நடு நிகழ்வு உண்மையில் இப்படி ஒரு நிகழ்வு அனைவருக்கும் சிறந்த முன்னுதாரணம் .



சுற்றுச்சூழலை பாதுகாப்போம் இலங்கையை வளமான நாடாக உருவாக்குவோம் என்ற தோணிப் பொருளில் இந்த நிகழ்வு நடந்தது.


பாடசாலை மாணவர்களை இதுபோன்ற நிகழ்வில் இணைந்துக் கொண்டது மிகப்பெரிய முன்னுதாரணம்



இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாடசாலையின் பிரதி அதிபர் திரு, குமரன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சூரியன் அதிரடி மன்றம தலைவர் ராஜ்குமார் செயலாளர் மாரிமுத்து மற்றும் சசிகலா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்

