ரமழான் தினத்தில் ஸ்டார் தமிழ் தொலைக்காட்சியால் கண்ணீர் வடித்த கலை நிலா உவைஸ் செரீப்

ரமழான் தினத்தில் ஸ்டார் தமிழ் தொலைக்காட்சியால்
கண்ணீர் வடித்த கலை நிலா உவைஸ் செரீப்

கடந்த ஒரு மாத காலமாக இலங்கை தமிழ் தொலைக்காட்சிகள் இஸ்லாமிய நிகழ்ச்சிகளுக்கு முதலிடம் கொடுத்தன.காரணம் ரமழான் நோன்பு மாதம் தான்.

இந்த நோன்பு மாதத்தில் பலர் தொலைக்காட்சி கலையகங்களுக்கு வந்து தங்கள் நிகழ்ச்சிகளை படைத்தார்கள்.

நவீன காலம் ,புதிய தொழிநுட்பம் என்ற பெயரில் நாம் எமது மூத்த இஸ்லாமிய அறிவிப்பளர்களை மறப்பது போன்று ஊடகங்களும் மறந்தன.

கடந்த 40 வருட காலமாக கலையுலகில் பிரகாசிக்கும் நமது படைப்பாளி கலை நிலா உவைஸ் செரீப் அவர்களுக்கு மீண்டும் தொலைக்காட்சி வாய்ப்பு தந்து அழகு பார்த்தது ஸ்டார் தமிழ் வானொலி.

புதியவர்களை கண்டவுடன் பழசை மறக்கும் ஊடகங்களுக்கு மத்தியில் திரு உவைஸ் செரீப் போன்றோருக்கு வாய்ப்பளிக்கும் ஸ்டார் தமிழ் தொலைக்காட்சி குடும்பத்திற்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!