நான் தான் ஆயிஷாவை கொலை செய்தேன் | ஏன் என்றால்?

அடலுகம பிரதேசத்தில் காமவெறியனின் வெறித்தனத்திற்கு உள்ளாகி கொலைசெய்யப்பட்ட 9 வயது பாத்திமா ஆயிஷாவை தான் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள 29 வயது குற்றவாளி பொலிஸார் முன்னிலையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

27 ஆம் திகதி பாத்திமா ஆயிஷா கோழி இறைச்சி வாங்கிவிட்டு வீடு செல்லும் வழியில் அவளை பார்த்ததும் தனக்கு ஆசை வந்ததாக 3 பெண் பிள்ளைகளின் தந்தையான இந்த காமவெறியன் கூறியுள்ளான்.

ஆயிஷாவின் பிரேத பரிசோதனையில் ஆயிஷா பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

ஆயிஷாவை தூக்கி சென்று பிறகு அவள் தன பெற்றோரிடம் சொல்லிவிடுவாள் என்ற பயத்தில் சேற்றில் தண்ணீருக்குள் உயிர் போகும்வரை தலை வைத்து எழுதியதாக குற்றவாளி பொலிஸ் முன் ஒப்புதல் வாக்கு மூலம் வழங்கியதாக ஹிரு நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த காணொளியில் 4.19 வது நிமிடத்தில் பார்க்கவும்

கொலைசெய்யப்பட்ட பாத்திமா ஆயிஷாவின் உறவினரான இந்த நபர் போதைவஸ்துக்கு அடிமையானவர் என கூறப்படுவதாக ஹிரு நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் சம்பவம் நடந்த தினம் இவர் போதைவஸ்து பாவித்தாரா? என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

இந்த நபருக்கு என்ற வயதுகளில் 3 பெண் பிள்ளைகள் இருப்பதாகவும் , இவனது மனைவி தற்போது 4 வது குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எது எப்படியோ இவனுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்பதே அனைவரினது வேண்டுகோள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!