றைகம் மேற்பிரிவு ஸ்ரீ குறிஞ்சி மகாமாரி அம்மன்-உதவுவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்

களுத்துறை மாவட்டத்தில் பெரிய ஆலயமாக உருவாகிவரும் இங்கிரிய, றைகம் மேற்பிரிவு ஸ்ரீ குறிஞ்சி மகாமாரி அம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகத்துக்கான பெரும் பணிகள் தற்போது விரைவாக முன்னெடுத்து வரப்படுகிறது.


இந்தப் பெரு ஆலயம் உருவாக அயராது உழைத்த ஆலய அறங்காவலர் அமரர் கிருஸ்ணனின் திடீர் மறைவு ஆலய கட்டுமான பணிகளின் வேகத்தை சற்று குறைப்பதாகவும், ஏதோ ஒரு பெரிய சக்தியை, ஆளுமையை நாங்கள் இழந்து விட்டதாகவும் எண்ணத் தோணுகிறது.


எனவே இந்த இக்கட்டான சூழலில் தலைவரின் கனவை நனவாக்குவதற்கும், ஸ்ரீ குறிஞ்சி மகாமாரி அம்மனின் கும்பாபிஷேக பணிகளை விரைந்து முடிக்கவும், இளைய தலைமுறை களத்துக்கு வந்து உங்களால் முடிந்த உதவிகளை செய்தால் அது ஊருக்கும், உங்களுக்கும் நன்மையாக அமையும் என்று நம்புகிறோம்.


நல் உள்ளம் படைத்த செல்வந்தர்கள் அம்பாளின் திருப்பணிகளுக்கு தங்களால் முடிந்த நிதி உதவிகளை வழங்கி எமது ஆலய கும்பாபிஷேகம் இனிதே நடைபெற உதவுவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்;.
தங்களின் நன்கொடைகளை sri kurinchi. என்ற பெயரில் bank of Ceylon- ingiriya. a/c.No: 3671879 என்ற வங்கிக் கணக்குக்கு அனுப்புங்கள்.


ஆலய திருப்பணிகளுக்கு அயராது உழைத்த கிருஸ்ணன் தலைவரின் வரலாற்று காணொளியை இணைத்திருக்கிறேன். வாய்ப்புள்ளோர் பாருங்கள், பகிருங்கள்.
அம்பாளின் திருப்பணிகளுக்கு உதவுங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!